ரேஷன் கடைகளுக்கு புதிய உத்தரவிட்ட தமிழக அரசு.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்.!
New announce for ration shop
தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் நடைபெறும் ஊழலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தபோதிலும் ரேஷன் பொருட்கள் கடத்தப்படுவது சாதாரணமாக நடந்து வருகிறது.
அந்த வகையில் ஊழலை தடுக்க அரசு புதிய திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது. அந்த வகையில் ஒவ்வொரு ரேஷன் கடைகளுக்கும் எவ்வளவு பொருட்கள் வருகிறது என்பதையும், மக்களுக்கு விநியோகத்து மீதமுள்ள பொருட்கள் இருப்பு எவ்வளவு உள்ளது என்பது குறித்த மொத்த கணக்கு வழக்குகளையும் தகவல் பலகையில் இருக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.
English Summary
New announce for ration shop