புற்றுநோய் சிகிச்சையில் புதிய முன்னேற்றம்..CAR-T செல் தெரபியை அறிமுகம் செய்த காவேரி மருத்துவமனை! - Seithipunal
Seithipunal


சென்னை மாநகரில் முன்னணி பன்முக சிறப்பு சிகிச்சை மருத்துவமனைகளுள் முதன்மை வகிக்கும் காவேரி மருத்துவமனை, ஆழ்வார்பேட்டை புற்றுநோய் சிகிச்சை துறையில் ஒரு பெரிய முன்னேற்றமான சிமெரிக் ஆன்டிஜென் ரிசெப்டர் டி-செல் (CAR-T) சிகிச்சை திட்டத்தை தொடங்கியிருக்கிறது.

 இந்த அறிமுகத்தின் மூலம் குறிப்பிட்ட சில இரத்தப் புற்றுநோய்களுக்கு மேம்பட்ட வடிவிலான நோய் எதிர்ப்பு சிகிச்சையை இந்தியாவில் வழங்கும் வெகுசில மருத்துவமனைகள் பட்டியலில் ஒன்றாக காவேரி மருத்துவமனையும் இடம் பிடித்திருக்கிறது. 

CAR-T சிகிச்சை என்பது புற்றுநோயை எதிர்த்து போரிட டி-செல்கள் என அழைக்கப்படும் நோயாளியின் சொந்த நோய் எதிர்ப்புத்திறன் செல்களை பயன்படுத்துகிற நோயெதிர்ப்பு சிகிச்சையின் ஒரு வகையாகும். நோயாளியின் சொந்த இரத்தத்தில் இருந்து இந்த டி-செல்களை மருத்துவர்கள் எடுத்து, புற்றுநோய் செல்களை சிறப்பாக அடையாளம் கண்டு அவைகளை தாக்குவதற்கு ஏற்றவாறு பரிசோதனையகத்தில் மறுவடிவாக்கம் செய்கின்றனர். இந்த மறுவடிவாக்க செயல்முறைக்கு பிறகு மறுவடிவமைப்பு செய்யப்பட்ட டி-செல்கள் நோயாளியின் உடலுக்குள் உட்செலுத்தப்படுகின்றனர். 

காவேரி மருத்துவமனையில் இரத்தப் புற்றுநோயியல் துறையின் சிறப்பு மருத்துவரும், எலும்பு மஜ்ஜை மாற்றுப்பதிய நிபுணருமான டாக்டர். அர்ஷத் ராஜா பேசுகையில், “இரத்தப் புற்றுநோய்களுக்கு நாங்கள் சிகிச்சையளிக்கும் முறையை CAR-T செல் தெரபி மாற்றுகிறது. உள்நாட்டிலேயே இப்போது கிடைக்கும் இந்த நவீன முன்னேற்றத்தின் மூலம் இரத்தப் புற்றுநோய்க்கான சிகிச்சைக்கு எமது அணுகுமுறையை இது மறுவரையறை செய்கிறது; இதன் மூலம் ஒரு காலத்தில் கிடைக்கப்பெறாமல் இருந்த உலகத்தரம் வாய்ந்த, துல்லியமான இலக்கை குறிவைக்கும் சிகிச்சையின் மூலம் இந்தியாவிலுள்ள நோயாளிகளுக்கு சிறப்பான பயனளிக்கும் சிகிச்சையை இப்போது நாங்கள் வழங்குகிறோம்” என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

New advancement in cancer treatment Kaveri Hospital introduces CAR T cell therapy


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->