புத்தாண்டு கொண்டாட்டம் : ஏற்காட்டில் மது அருந்திய வாலிபர் நொடியில் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் உள்ள மல்லூர் வேங்காம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை மகன் சந்தோஷ். இவர், நேற்று மாலை ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு புகழ்பெற்ற பெற்ற சுற்றுலா தலமான ஏற்காட்டுக்கு தனது நண்பர்கள் ஒன்பது பேருடன் வந்தார். 

அங்கு அவர்கள் அனைவரும் தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி புத்தாண்டை கொண்டாடுவதற்கு அணைத்து ஏற்பாடுகளையும் செய்தனர். அதற்காக  அசைவ உணவுகள் மற்றும் மது பாட்டில்கள் உள்ளிட்டவற்றை வாங்கி வைத்திருந்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாட ஆரம்பித்தனர். 

அதன் பின்னர், நடைபெற்ற மதுவிருந்தில் சந்தோஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து மதுகுடித்துள்ளார். அப்போது சந்தோஷ்க்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

இதைப்பார்த்த அவரது நண்பர்கள் சந்தோஷை மீட்டு ஏற்காட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். 

இது குறித்து ஏற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். அந்த விசாரணையில், "சந்தோஷ் நேற்று தான் முதல் முறையாக மது குடித்துள்ளார் என்பதும், அது அவரின் உடலுக்கு ஏற்றுக்கொள்ளாத நிலையில் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது. 

மேலும், உயிரிழந்த  சந்தோஷூக்கு மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர். ஏற்காட்டில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு நண்பர்களுடன் வந்த வாலிபர் மது அருந்தியதால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near yercaud yuoung man died in take liquar drinks


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->