திருநெல்வேலி : களக்காடு அருகே வீட்டில் வைரக்கற்கள் பதுக்கி வைத்த இருவர் கைது.! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு பகுதியில் வைரக்கற்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி, போலீசார் நேற்று கீழப்பத்தையில் உள்ள ஒரு வீட்டிற்குச் சென்று சோதனை மேற்கொண்டனர். 

அப்போது, அங்கிருந்த இரண்டு பேரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் போலீசாருக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டு விசாரணையை தீவிரபடுத்தினர். 

அதில் அவர்கள் இருவரும் கீழப்பத்தையைச் சேர்ந்த வேல்முருகன் மற்றும் மஞ்சுவிளையை சேர்ந்த சுசில்குமார் என்பதும், வைரக்கற்களை பதுக்கி வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் இரண்டு பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து சுமார் ½ கிலோ வைரக்கற்களையும் பறிமுதல் செய்தனர். 

இதையடுத்து, கைது செய்யப்பட்ட இருவரும் வைரக்கர்களுடன் களக்காடு வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும், பறிமுதல் செய்யப்பட்ட வைரக்கற்களின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் களக்காடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near thirunelveli two peoples arrested for diamonds hoarding


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->