ரேக்ளா வண்டியில் மணமகளை ஊர்வலமாக அழைத்து வந்த மணமகன் - வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ.!
near sengundram new married couples drive rekla cart
திருமணம் என்றால் உறவினர்கள் மணமக்களை ஆடம்பரமான கார்களில் ஊர்வலமாக அழைத்து வருவது வழக்கமாக உள்ள இந்த காலகட்டத்தில், ஒரு ஊரில் உறவினர்கள் மணமக்களை ரேக்ளா வண்டியில் ஊர்வலமாக அழைத்து சென்றது பெரும் வியப்பை ஏற்படுத்தியது.
அந்த வகையில், திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள செங்குன்றத்தை அடுத்த வடபெரும்பாக்கம் செட்டிமேடு பகுதியை சேர்ந்தவர்கள் கோபால்-கண்ணகி தம்பதியினர். இவர்கள் மகன் விஜய். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆனந்தன்-மேரி தம்பதியினரின் மகள் ரம்யாவுக்கும் திருமணம் நடைபெற்றது.
அதன் பிறகு உறவினர்கள், மணமகன் விஜய் மற்றும் மணமகள் ரம்யாவை குலதெய்வம் கோவிலில் இருந்து தனது வீட்டிற்கு இரண்டு மாடுகள் பூட்டிய பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ரேக்ளா வண்டியில் ஊர்வலமாக அழைத்து வந்தனர்.
இந்த ரேக்ளா வண்டியை மணமகன் ஓட்ட, மணமகள் ரம்யா அருகில் அமர்ந்து, காளைகள் இரண்டும் சாலையில் சீறிப்பாய்ந்த படி, வந்தனர். அப்போது மணமக்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இருசக்கர வாகனத்தில் ரேக்ளா வண்டியின் இருபுறமும் புடைசூழ வந்தனர். இதைதொடர்ந்த்து, வீட்டிற்கு வந்த மணமக்களை உறவினர்கள் வாழ்த்தினர்.
English Summary
near sengundram new married couples drive rekla cart