நன்னிலம் அருகே கணவன் மனைவி அடுத்ததடுத்து தற்கொலை - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம் அருகே சோத்தக்குடி பகுதியை சேர்ந்தவர்கள் சுபாஷ்-அஷ்டலட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு பிறந்து மூன்று மாதம் ஆன குழந்தை உள்ளது. 

இந்த நிலையில் கடந்த வாரம் கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு சுபாஷ் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையறிந்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள் சுபாஷை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து அவர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு வீடு திரும்பியுள்ளார். 

இதனால், மன உளைச்சலுக்கு ஆளான அஷ்டலட்சுமி இன்று அதிகாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளனர்.

அந்த தகவலின் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அஷ்டலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தகவலை அறிந்த சுபாஷ் அருகில் உள்ள ஒரு மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

அதன் பின்னர் போலீசார், அவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கணவன் மனைவி அடுத்தடுத்து உயிரிழந்ததனால், போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near nannilam husband and wife sucide


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->