தருமபுரி : திருமணமான இரண்டே வருடத்தில் இளம்பெண் தற்கொலை.! - Seithipunal
Seithipunal


தருமபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம் அருகே போடூர் பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன். இவர் மனைவி ஜோதி. இவர் நர்சிங் முடித்து தனியார் மருத்துவமனையில் பணி புரிந்து வருகிறார். 

இவர், தன் தாத்தா உயிரிழந்துள்ளதால் அவருடைய இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக செல்ல வேண்டும் என்று தன் கணவரிடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் மனம் உடைந்து போன ஜோதி நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அருகிலிருந்தவர்கள் இதைப்பார்த்து ஜோதியின் உடலை மீட்டு பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

ஜோதிக்கு திருமணமாகி இரண்டு வருடமே ஆவதால் ஆர்.டி.ஓ.விசாரணைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பியுள்ளார்கள். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near dharmapuri young woman sucide for family problam


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->