தருமபுரி : திருமணமான இரண்டே வருடத்தில் இளம்பெண் தற்கொலை.!
near dharmapuri young woman sucide for family problam
தருமபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம் அருகே போடூர் பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன். இவர் மனைவி ஜோதி. இவர் நர்சிங் முடித்து தனியார் மருத்துவமனையில் பணி புரிந்து வருகிறார்.
இவர், தன் தாத்தா உயிரிழந்துள்ளதால் அவருடைய இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக செல்ல வேண்டும் என்று தன் கணவரிடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் மனம் உடைந்து போன ஜோதி நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அருகிலிருந்தவர்கள் இதைப்பார்த்து ஜோதியின் உடலை மீட்டு பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஜோதிக்கு திருமணமாகி இரண்டு வருடமே ஆவதால் ஆர்.டி.ஓ.விசாரணைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பியுள்ளார்கள். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
near dharmapuri young woman sucide for family problam