சிதம்பரம் : வீட்டில் படித்துக் கொண்டிருந்த பள்ளி மாணவன் திடீர் சாவு.!. - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் வடபாதி பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மகன் ஹரீஸ் ராகவேந்திரா. இவர் அண்ணா மலை நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். 

இந்நிலையில், இவர் நேற்று மாலை வீட்டில் படித்துக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதைக் பார்த்து அதிர்ச்சி அடைந்த  பெற்றோர்கள், உடனடியாக அவரை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஹரீஸ் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். அதன் பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ராஜாமுத்தையா மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக அண்ணா மலைநகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near chithambaram plus two student died


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->