சென்னை : நொச்சிக்குப்பம் அருகே ராட்சத அலையில் சிக்கி வாலிபர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள மயிலாப்பூரைச் சேர்ந்தவர் தினேஷ் குமார். இவர், அடையாறு அருகே பலசரக்கு கடை ஒன்று வைத்து நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். 

இந்நிலையில், இவர் நேற்று மதியம் சென்னை மெரினா கடற்கரைக்கு தனியாக சென்றிருந்தார். இதையடுத்து அவர் நொச்சிக்குப்பம் அருகே கடலுக்குள் இறங்கி நின்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வந்த ராட்சத அலையில் சிக்கிக் கொண்டு கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார்.

இதைப்பார்த்த பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் கூச்சலிட்டதில், அங்கிருந்த கடலோர மீட்புப்படை குழுவினர் வந்து, கடலில் மூழ்கி தத்தளித்து கொண்டிருந்த தினேஷ்குமாரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

அதன் பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் படி, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மயிலாப்பூர் போலீசார், தினேஷ் குமாரை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு தினேஷ்குமாரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near chennai young man died in nochikuppam sea for heavy wave


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->