சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இரண்டு கார்கள் மீது தீ வைத்த வாலிபர்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள வளசரவாக்கத்தையடுத்த, ஆழ்வார்திருநகரில் உள்ள துரைராஜ் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்ரீகாந்த் மற்றும் கோகுல் உள்ளிட்டோரின் கார்கள் அடுத்தடுத்து தீப்பிடித்து எரிந்தது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரீகாந்த், கோகுல் மற்றும் அப்பகுதி மக்கள் போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் அளித்தனர். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், பலமணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். 

இருப்பினும், கார்கள் தீயில் கருகி முற்றிலும் எரிந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில் மர்ம நபர் ஒருவர், பாட்டிலில் மண்ணெண்ணையை எடுத்து வந்து இரண்டு கார்களின் மீதும் ஊற்றி தீ வைத்து எரிப்பது போன்று பதிவாகி இருந்தது. 

இதையடுத்து போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து அதே பகுதியில் வாடகைக்கு குடியிருந்து வரும் விக்னேஷ் என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்தனர்.

அந்த விசாரணையில் அவர், 'டிக்-டாக் ' மற்றும் 'யூடியூபர்கள்' போன்று பொதுமக்கள் மத்தியில் தன்னை பிரபலமாக்கி கொள்ள வேண்டும் என்ற ஆசையில் இரண்டு கார்களையும் தீ வைத்து எரித்ததாக தெரிவித்தார்.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவர் பிரபலமாக வேண்டும் என்ற ஆசையில் கார்களை தீ வைத்து எரித்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என விசாரித்து வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near chennai young man arrested for two cars fire accident


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->