தம்பி அண்ணாமலை இதையெல்லாம் கொஞ்சம் பேச வேண்டும் - சீமான் பேச்சு..! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் அரசு மருத்துவர்களின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில், கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உரையாற்றினார். 

அப்போது அவர் தெரிவித்ததாவது, “தம்பி அண்ணாமலை இதையெல்லாம் கொஞ்சம் பேச வேண்டும். என் மணலை விற்கிறான். என் நீரை உறிஞ்சி விற்கிறான். அதை கொஞ்சம் பேச வேண்டும். எல்லாத்தையும் விட்டுவிட்டு மதம் என்றே பேசக்கூடாது. மதம் கொண்ட யானையை கடைசியில் என்ன செய்வார்கள். புதைத்து விடுவோம். "யானைக்கு மனிதனுக்கும் மதம் பிடித்தால் அழிவு தான் மிஞ்சும்" என்று கவிஞர் மு.மேத்தா கூறுகிறார். 

இதை எல்லாம் கொஞ்சம் பேசுங்கள்.  இது உங்கள் அரசு, உங்கள் ஆட்சி, இது உங்கள் பிரச்சனை. எட்டு ஆண்டுகளாக இருந்துள்ளீர்கள். இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கிறது. இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்.

அன்புத் தம்பி அண்ணாமலைக்கு ஒரு கோரிக்கை வைக்கின்றேன். "தயவு செய்து இந்த போராட்டத்தில் வந்து பங்கு கொள்ளுங்கள். எனக்கு ஒரு ஓட்டு கூட போட வேண்டாம். அனைத்து ஓட்டையும் உங்களுக்கே போடச் சொல்லுகின்றேன். தயவு செய்து இந்த பிரச்சனையை கவனத்தில் எடுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near chennai government doctors strike ntk seeman speech


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->