வரதட்சணை தொல்லை.. மாமியாரும், நாத்தனாரும் கொடுமை.. வீடீயோ போட்டுவிட்டு பெண் தற்கொலை.! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் பள்ளிபாளையம் அக்ரஹார பகுதியைச் சேர்ந்த ராகவேந்தர் என்பவர் ஜவுளி வியாபாரம் செய்து வந்துள்ளார். இவர் பொறியியல் பட்டதாரியான அபிராமி (31 வயது) என்பவரை கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார். திருமணமான சில நாட்களிலேயே ராகவேந்தர் மற்றும் அவருடைய தாய் இருவரும் அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி வந்துள்ளனர். 

கடந்த மூன்று மாதமாகவே அவர் தனது தாய் வீட்டில் தான் இருந்து வந்துள்ளார். தனது வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே நினைத்து வருத்தம் அடைந்த அபிராமி தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் தனது தாய் வீட்டுக்கு கால் செய்து உடல்நிலை சரியில்லை, எனவே கணவர் வீட்டிற்கு செல்கிறேன் என்று கூறியுள்ளார். 

பின் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தந்தைக்கு தகவல் கிடைத்த நிலையில் அவர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். 
இந்நிலையில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அபிராமி பதிவு செய்த ஒரு வீடியோ கிடைத்துள்ளது.

அதில் தனது தற்கொலைக்கு கணவரின் தாயும், சகோதரியும் தான் காரணம் என்று பேசியுள்ளார். இது பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Namakkal Women Suicide For Dowry Issue


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->