4ம் வகுப்பு மாணவன் மர்ம மரணம்.. உறவினர்கள் போராட்டம்.. புதுக்கோட்டை அருகே பரபரப்பு..! - Seithipunal
Seithipunal


நான்காம் வகுப்பு மாணவன் வகுப்பறையில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் விடுதி கிராமத்தை சேர்ந்தவர் நாடிமுத்து. இவருக்கு திருமணமாகி போதினி என்ற மனைவியும் கிருஷ்ணவேணி என்ற மகளும் நிதிஷ்குமார் என்ற மகனும் உள்ளனர். இவர்கள் இருவரும் அங்குள்ள அரசு பள்ளி ஒன்றில் படித்து வருகின்றர்.

நேற்று பள்ளிக்கு சென்ற அவன் திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதனால், அந்த மாணவனின் வகுப்பாசிரியர் அவனிய வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். அங்கு அவரின் பாட்டி மற்றும் இருந்ததால் அவரின் தந்தைக்கு தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளார்.

மேலும், அந்த சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், அந்த சிறுவன் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அந்த சிறுவனின் உடலை பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில், இன்று காலையில் இருந்து சிறுவனின் மரணத்திற்கு காரணம் கேட்டு அக்கிராம மக்கள் பள்ளியில் குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் அவர்கள் கலைந்து சென்றனர். ஆனால்,  காலை பள்ளி வளாகத்தில் நல்ல பாம்பு சுற்றியதை கண்ட கிராம மக்கள் அதனை அடித்து கொன்றனர்.

மேலும், பள்ளியில் இருந்து வந்த மாணவன் உயிரிழந்தது குறித்து சரியான விளக்கம் அளிக்காததால் மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார். சிறுவனின் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருவதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பற்படுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mysterious death of school student


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->