முனீஸ்வரன் கையிலிருந்த கத்தி திருட்டு.. சிலையின் அடியில் திமுக சின்னம்.. காட்பாடியில் பரபரப்பு.!! - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே உள்ள கழிஞ்சூர் பகுதியில் முனீஸ்வரர் கோவில் உள்ளது. அங்கு உள்ள முனீஸ்வரர் கையில் கத்தி ஒன்று  வைக்கப்பட்டிருந்தது. அவனை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். 

அதோடு கருப்பு மையில் சிலையின் மீது தவறான வார்த்தைகளை எழுதியதோடு, திமுகவின் சின்னமான உதய சூரியன் சின்னத்தை வரைந்து விட்டு சென்றுள்ளனர். இதையடுத்து சம்பவம் அறிந்து முனீஸ்வரன் கோவிலுக்கு விரைந்து வந்த வேலூர் காவல்துறையினர், சம்பவத்தை செய்தது யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தேர்தல் சமயத்தில் சாமி சிலையில் இருந்து கத்தியை திருடியதோடு, அதன் மீது ஒரு கட்சியின் சின்னத்தை வரைந்து விட்டு சென்று உள்ளதால், ஏதேனும் நாச வேலைக்கான திட்டமாக இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Muneeswarar knife theft


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->