முகிலன் வழக்கு முடித்து வைத்தது நீதிமன்றம்!  - Seithipunal
Seithipunal


காணாமல் போன முகிலனை நேரில் ஆஜர் படுத்த வேண்டும் என ஹென்றி திபேன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கின் விசாரணையின்போது சிபிசிஐடி போலீசார், முகிலன் எங்கிருக்கிறார் என்பது குறித்து துப்பு கிடைத்துள்ளதாக தெரிவித்தனர். அதனையடுத்து விசாரணையை தொடரும்படி நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இதற்கிடையே கடந்த ஜூலை மாதம் 6-ம் தேதி  முகிலன்  திருப்பதியில் கண்டுபிடிக்கப்பட்டு, பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் முகிலனை மீட்க கோரிய ஆட்கொணர்வு மனு வழக்கு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் நிர்மல் குமார் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.  முகிலன் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், கரூரை சேர்ந்த பெண் அளித்திருந்த பாலியல் புகாரில் கைது செய்திருப்பதாகவும், தற்போது அவர் நீதிமன்ற காவலில் இருப்பதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து அவரை கண்டுபிடித்து தர கோரிய ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mugilan case closed


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->