சென்னை.! தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் அண்ணன்-தங்கை படுகாயம்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் அண்ணன் மற்றும் தங்கை படுகாயம் அடைந்துள்ளனர்.

சென்னை ஆவடியை அடுத்த கொள்ளுமேடு விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கன்னியப்பன் (வயது 22). இவர் தாம்பரத்தில் உள்ள சித்தியின் மகளான பார்கவியை ஆவடியில் உள்ள தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்தார்.

அப்போது மோரை அருகே திடீரென நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் மேம்பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி 25 அடி உயர மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்துள்ளனர்.

இதில் படுகாயமடைந்த அண்ணன் மற்றும் தங்கை இருவரும் வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த விபத்து குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Motorcycle crash into retaining wall in chennai


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->