மதுரை : தடுப்பு சுவரில் கார் மோதி விபத்து.! தாய்-மகன் பலி, 3 பேர் படுகாயம் - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் தடுப்புச் சுவரில் கார் மோதிய விபத்தில் தாய்-மகன் உயிரிழந்தனர் மற்றும் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.

திருப்பூர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (43). இவரும், இவரது மகன்களான கருப்பசாமி, வினோத் மற்றும் பேரன் பிரவீன் குமார், உறவினர் நாகலட்சுமி ஆகிய 5 பேரும் விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணை பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக காரில் சென்றனர். அப்பொழுது திருமங்கலம் விருதுநகர் நான்கு வழிச்சாலை, கரிசல்பட்டி மேம்பாலத்தில் கார் சென்றபோது திடீரென சாலையோர தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 5 பேரும் பலத்த காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமி மற்றும் அவரது மகன் கருப்புசாமி ஆகிய இரண்டு பேரும் உயிரிழந்தனர்.

மேலும் மற்று மூன்று பேரும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mother son killed and 3 injured in car accident in madurai


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->