கணவர் இறந்த மன உளைச்சலில்.. மகனுடன் தற்கொலை செய்து கொண்ட மனைவி..! - Seithipunal
Seithipunal


3 வயது குழந்தையுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம், கொண்டமட நாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் கீதா. இவரது மகன் வில்வின் (3) உடன் வசித்து வருகிறார். கணவர் கடந்தாண்டு இறந்ததால் மகனுடன் அவர் வளையம்பட்டியில் குடியேறினார். இந்நிலையில், பண்டிக்கைக்காக மறுபடியும் அவர் கணவரின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது கணவரின் நினைவால் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால், அவர் தனது மகனை மடியில் கட்டி கொண்டு அங்குள்ள விவசாய கிணற்றில் குதித்துள்ளார். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புதுறையினர் அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுப்பட்டனர். இருவரும் 2 மணி நேரம் கழித்து சடலமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mother Committed Suicide With child in Namakkal


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->