தென்காசி அருகே பரபரப்பு: 2 மகள்களை கிணற்றில் வீசி கொன்று விட்டு தாயும் தற்கொலை.! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டத்தில் இரண்டு மகள்களை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி மாவட்டம் ஆத்துவழி பகுதியை சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் முருகன்(30). இவரது மனைவி மீனா(28). இவர்களுக்கு ஆறு மற்றும் இரண்டு வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மேலும் முருகனும், மீனாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டதால், மீனாவிற்கும் அவரது குடும்பத்திற்கும், எந்த தொடர்பும் இல்லாமல் இருந்துள்ளது. 

இந்நிலையில் கணவன்-மனைவியிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மீனா கடந்த சில நாட்களாக மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இதையடுத்து நேற்று முன்தின இரவு மீனா இரண்டு மகள்களையும் அழைத்துக் கொண்டு வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் மீனா வீட்டிற்கு வரவில்லை.

இதையடுத்து நேற்று காலை மீனா மற்றும் இரண்டு மகள்களும் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் பிணமாக கிடந்துள்ளனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் மூன்று பேரின் உடல்களை மீட்டு பிரயோத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், மீனா இரண்டு மகள்களையும் கிணற்றில் வீசி கொன்று விட்டு பின்பு அவரும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mother committed suicide by throwing her 2 daughters into a well and dead in thenkasi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->