குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை... காரணம் குறித்து விசாரணை நடத்தும் காவல்துறை..! - Seithipunal
Seithipunal


2 குழந்தைகளை கொன்று விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கரூர் மாவட்டம் , செம்பியநத்தம்  கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவருக்கு திருமணமாகி சரண்யா என்ற மனைவியும் , கனிஷ்கா(6) புதிஷா(3) என்ற இரு மகள்களும் உள்ளனர்.  சம்பவதன்று உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில், சரண்யா மற்றும் குழந்தைகள் வீட்டில் தனியா இருந்து வந்துள்ளனர். இரவில் தூங்கி கொண்டிருந்த மகள்களை எழுப்பி அருகில் இருந்த கிணற்றில் தள்ளிவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புதுறையினர் அவர்களின் உடலை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சனை காரணமாக அவர்கள் தற்கொலை செய்துகொண்டதாக தெரிகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mother commits suicide after killing children near Karur


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->