குடும்ப பிரச்சனை காரணமாக தாய் மகள் தற்கொலை.. திருப்பூர் அருகே நடந்த சோகம்..!
Mother and Son Committed Suicide
குடும்ப பிரச்சனை காரணமாக தாய் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், அலங்கியம் பகுதியை சேர்ந்தவர் பூங்கோடி. இவரது கணவர் இறந்துவிட்டதால் அவரது மகள் வர்ஷாவுடன் தனியே வசித்து வருகிறார். அங்குள்ள நூலாலையில் வேலை செய்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் குரூப் 4 தேர்விற்காக தயாராகி கொண்டிருந்தார். சம்பவதன்று தேர்வு எழுதிவிட்டு வந்துள்ளார்.
கடந்த சில நாட்களாக அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் குழந்தை தூக்கில் தொங்கவிட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டார். வீட்டிற்கு வந்த பூங்கோடியின் தாய் சரஸ்வதி மகளும் பேத்தியிம் தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Mother and Son Committed Suicide