பா.ஜ.க.வை முறியடிக்கும் சக்தி இவருக்கு மட்டுமே உண்டு..! ஆ. ராசா எம்.பி. பேச்சு! - Seithipunal
Seithipunal


நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில், திருப்பூர் அவினாசி சட்டமன்ற தொகுதி தி.மு.க கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஆ. ராசா எம்.பி. தெரிவித்திருப்பதாவது, 

பா.ஜ.க ஆட்சியை எதிர்வரும் தேர்தலில் முறியடிக்கும் சக்தி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மட்டுமே உள்ளது. பாராளுமன்றத்தில் நடைபெறும் கேள்வி நேரத்தில் பங்கேற்காத ஒரே பிரதமர் நரேந்திர மோடி தான்.

வருகின்ற மக்களவைத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் தி.மு.க நிச்சயம் வெற்றி பெறும். அதற்காக அனைவரும் தேர்தல் பணியில் ஒன்றுபட்டு ஈடுபடுகிறோம். 

நம்முடைய வெற்றியை முதலமைச்சராக மு.க. ஸ்டாலினுக்கு காணிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். தமிழகத்தில் முந்தைய ஆட்சி செய்த அ.தி.மு.கவினர் தமிழக அரசின் கஜானாவை காலி செய்து விட்டு சென்றனர். 

பிறகு ஆட்சி பொறுப்பேற்ற முதலமைச்சர் ஸ்டாலின் மூன்று மாதங்களில் பல்வேறு தொழில் முதலீடுகளை தமிழகத்திற்கு கொண்டு வந்தார். 

இதன் மூலம் 8 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு தொடர்ந்து மாநில அரசுக்கு தரவேண்டிய நிதியை தராமல் உள்ளது என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

mk Stalin power defeat BJP


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->