மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்ற கூலி தொழிலாளியின் மகள்.! - Seithipunal
Seithipunal


கூலித் தொழிலாளியின் மகள் மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்தவர் மனோகர். கூலித் தொழிலாளியான இவருக்கு ரக்ஷயா என்ற இளம் வயது மகள் உள்ளார். கல்லூரி படிப்பை முடித்திருக்கும் ரக்ஷயாவுக்கு, சிறுவயதில் இருந்தே அழகிப் போட்டியில் பங்கேற்று பட்டம் பெற வேண்டும் என்று ஆசையும், இலட்சியமும் ஆகும் 

பெற்றோர் கொடுத்த ஊக்கம் காரணமாக பகுதி நேர வேலை செய்தும் படித்தும் இதற்காக அவர் தன்னை தயார்ப்படுத்தி வந்துள்ளார். அதன்படி கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த மோனோ ஆக்டிங் நிகழ்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.

இவரது வெற்றியை கெளரவிக்கும் வகையில் அரசு சார்பில் மலேசியா அழைத்து சென்று கெளரவித்தனர். இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 'Forever Star India Awards' நடத்திய மாவட்ட அளவிலான அழகிகள் போட்டியில் தேர்வாகினார்.

அதனைத் தொடர்ந்து அங்கிருந்து மாநில அளவில் நடந்த அழகிபோட்டியானது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கடந்த 18-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

இதில் தமிழ்நாட்டை சேர்ந்த ரக்ஷயா 'மிஸ் தமிழ்நாடு' பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். மேலும் பல்வேறு மாநிலங்களில் இருந்து வின்னர், ரன்னர் என்று சுமார் 750 பேர் இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.

தொடர்ந்து வரும் டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கும் 'மிஸ் இந்தியா' போட்டியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்வான போட்டியாளர்கள் பங்கேற்கவுள்ளனர். இதில் வெற்றிபெறுவர் 'மிஸ் இந்தியா' பட்டத்தை வென்று சாதனை படைப்பர்.

மேலும், டிசம்பர் மாதம் 'மிஸ் இந்தியா' நடைபெறும் அழகிப்போட்டியில் இந்தியா முழுவதும் தேர்வாகிய வின்னர், ரன்னர் என அனைவரும் ஸ்டேஜ் ஷோ செய்ய உள்ளனர். இதில் தேர்வாகும் நபர் மிஸ் இந்தியா பட்டத்தை வெல்ல உள்ளனர். நிச்சயம் மிஸ் இந்தியா பட்டத்தை தட்டிச் செல்வேன் என்று ரக்சயா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Miss TamilNadu won chengalpattu Rakshya


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->