எதையாச்சும் பேசிட்டே இருக்க வேண்டியது... கமல் மீது அமைச்சர் செல்லூர் ராஜு தாக்கு..! - Seithipunal
Seithipunal


மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசன், யாரோ எழுதிக் கொடுத்ததை காலையில் பேசிவிட்டு, மாலை நேரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெறுவதாக அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம் செய்துள்ளார். 

மதுரையில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்றும் பணிகளை பார்வையிட்ட பின் செய்தியாளர்களை அமைச்சர் செல்லூர் ராஜு சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " நடிகர் கமல் ஹாசன் அரசியலை படப்பிடிப்பு தளமாக நினைத்துக் கொண்டு இருக்கிறார். யாரோ எழுதிக் கொடுத்ததை வைத்து அவர் பேசி வருகிறார். 

காலையில் எழுந்ததும் எதையாவது பேசிவிட்டு, மாலை நேரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று அங்கும் அரசியல் பேசி வருகிறார். அந்த நிகழ்ச்சியை அரசியலுக்காக உபயோகம் செய்து மக்கள் மத்தியில் மதிப்பு பெற்றுவிடலாம் என்று நினைக்கிறார். யார் என்ன செய்தாலும் அம்மாவின் ஆட்சிதான் மீண்டும் அமையும் " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Minister Sellur K Raju Pressmeet 17 November 2020


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->