யோசிச்சு முடிவெடுத்துகோங்க.. எதிர்காலம் இருக்கு... அமைச்சர் கடம்பூர் ராஜு அல்டிமேட்.! - Seithipunal
Seithipunal


இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முத்தையா முரளிதரன் வாழ்க்கை திரைப்படமாக்க முடிவு செய்யப்பட்டது. இந்த படத்திற்கான நடிகர்கள் மற்றும் நடிகைகள் தேர்வு நடைபெற்று வந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதி இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக அதிகாரபூர்வ தகவல் வெளியானது. 

இந்த விஷயத்திற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பவே, இரண்டு நாட்களுக்குள் இது குறித்து முடிவெடுக்க உள்ளதாக நடிகர் விஜய் சேதுபதி தரப்பில் இருந்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதி 800 திரைப்படத்தில் நடிப்பது தொடர்பாக யோசனை செய்து முடிவெடுக்க வேண்டும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.

அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களை சந்திக்கையில், " முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படத்தில் நடிப்பது குறித்து விஜய் சேதுபதி யோசனை செய்ய வேண்டும். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். அவரது எதிர்காலத்திற்கு அதுவே நல்லது. தமிழகத்தில் திரையரங்கு திறப்பது தொடர்பான முடிவு ஒரு வாரத்திற்குள் எடுக்கப்படும் " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Minister Kadambur Raju Press meet 16 Oct 2020


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->