ரயில்கள் ரத்து எதிரொலி: பயணிகளுக்காக கூடுதல் பேருந்துகள்! மாநகரப் போக்குவரத்து கழகம் பிளான்! - Seithipunal
Seithipunal


புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகளின் வசதிக்காக தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே 150 பேருந்துகள் அதிகமாக இயக்கப்படும் என்று மாநகரப் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக மாநகரப் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தெற்கு ரயில்வே சார்பில் கோடம்பாக்கம்-சென்னை சென்ட்ரல் ரயில் நிலையங்கள் இடையே இன்று பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. 

இந்த வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காக தாம்பரம், கிண்டி, தியாகராய நகர், சென்ட்ரல், கடற்கரைக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகள் காலை 10 மணி முதல் பிற்பகல் 3:15 மணி வரை 150 பேருந்துகள் அதிகமாக இயக்கப்பட உள்ளது. 

முக்கிய பேருந்து நிலையங்களில் பேருந்துகள் இயக்கத்தை கண்காணிக்க அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது,

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Metropolitan Transport Corporation 150 more buses operated


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->