ரயில்கள் ரத்து எதிரொலி: பயணிகளுக்காக கூடுதல் பேருந்துகள்! மாநகரப் போக்குவரத்து கழகம் பிளான்! - Seithipunal
Seithipunal


புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகளின் வசதிக்காக தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே 150 பேருந்துகள் அதிகமாக இயக்கப்படும் என்று மாநகரப் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக மாநகரப் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தெற்கு ரயில்வே சார்பில் கோடம்பாக்கம்-சென்னை சென்ட்ரல் ரயில் நிலையங்கள் இடையே இன்று பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. 

இந்த வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காக தாம்பரம், கிண்டி, தியாகராய நகர், சென்ட்ரல், கடற்கரைக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகள் காலை 10 மணி முதல் பிற்பகல் 3:15 மணி வரை 150 பேருந்துகள் அதிகமாக இயக்கப்பட உள்ளது. 

முக்கிய பேருந்து நிலையங்களில் பேருந்துகள் இயக்கத்தை கண்காணிக்க அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது,

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Metropolitan Transport Corporation 150 more buses operated


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->