தெருவில் குளித்த பெண்கள்.. வீடீயோ எடுத்த இளைஞர்.. அடுத்தடுத்து அரங்கேறிய கொடூரம்.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் பகுதிக்கு அருகே இரு இளம் பெண்கள் தங்கள் வீட்டிற்கு முன் இருந்த மினி டேங்கில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக சென்ற இளைஞர் அவர்கள் குளிப்பதை செல்போனில் பதிவு செய்துள்ளார். 

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த இளம் பெண்கள் ஓடி சென்று அக்கம் பக்கத்தினரிடம் கூற அவர்கள் வீடியோ எடுத்த இளைஞரை பிடித்து தட்டி கேட்டதால் அங்கிருந்து தப்பியோட ஆரம்பித்தார். 

இதனை தொடர்ந்து அந்த இளைஞர் தனது ஊருக்கு சென்று பத்திருக்கும் மேற்பட்ட இளைஞர்களை அழைத்து வந்து அந்த ஊரில் இருந்த ஆண்கள், பெண்களை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் இரண்டு பெண்கள் மற்றும் மூன்று ஆண்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதில் காயம் அடைந்தவர்கள் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது பற்றி தகவல்கள் சமூக வலைதளங்களில் வயரிலானதை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Men video recording womens bathing in dindugal


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->