பாஜக தலைவர் அகோரத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி.!!
Mayiladuthurai BJP president agoram bail petition dismissed by MadrasHC
மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவராக இருக்கும் அகோரம் மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்திற்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது அடுத்து மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் அகோரம் மற்றும் மேலும் சிலரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் அகோரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தருமபுரம் ஆதீனத்திற்கு கொலை மிரட்டல் விடுத்ததற்கு முகாந்திரம் இருப்பதால் ஜாமீன் வழங்கக்கூடாது எனக்கு காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் அகோரத்தின் ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
English Summary
Mayiladuthurai BJP president agoram bail petition dismissed by MadrasHC