தீவிரமாக தேடிய காவல்துறையினர்.. திடீரென்று பெற்றோருக்கு ஷாக் கொடுத்த மார்த்தாண்டம் மாணவி.!
Marthandam student married
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் 47 வயது நபரின் இரண்டாவது மகள் அதே பகுதியில் இருக்கும் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அந்த மாணவி தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒரு நபரை காதலித்து வந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சமீபத்தில் அவர் கல்லூரிக்கு சென்று வீட்டிற்கு திரும்பி வராமல் இருந்துள்ளார். இதனால் அவரது பெற்றோர்கள் அந்த மாணவியை தேடி அங்கும் இங்கும் அலைந்துள்ளனர்.
இருப்பினும் அவர் கிடைக்காத காரணத்தால் மார்த்தாண்டம் போலீஸ் ஸ்டேஷனில் மகள் காணவில்லை யாரோ கடத்தி விட்டார்கள் என்று புகார் கொடுத்துள்ளனர். இந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் தீவிரமாக தேடிய நிலையில் வாட்ஸ்அப் மூலம் அந்த மகள் பெற்றோருக்கு தான் காதல் திருமணம் செய்துகொண்டதாக புகைப்படங்களை அனுப்பி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
English Summary
Marthandam student married