மாங்காடு பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் திடீர் திருப்பம் : கல்லூரி மாணவன் விக்னேஷ்., இன்ஸ்டா பழக்கம்? ஆபாச மெசேஜ்.,
MANGADU SCHOOL GIRL SUICIDE CASE MORE INFO
சென்னை மாங்காடு பகுதியில் 11ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர், பாலியல் தொல்லை காரணமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். பள்ளி மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பள்ளி மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்வதற்காக 3 தனிப்படை போலீஸ் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில் வெளியான தகவலின்படி, தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவி, ஒன்பதாம் வகுப்பு வரை வேறு ஒரு பள்ளியில் படித்து வந்துள்ளார். அந்த பள்ளியின் பழைய மாணவர்கள் சிலரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் தற்போது மாணவி படித்த பூந்தமல்லி அரசு பள்ளியிலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பத்தாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பு தோழர்கள் இடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதே சமயத்தில் மாணவி தனது தற்கொலை கடிதத்தில், தனது தற்கொலைக்கு முக்கிய காரணமாக ஆசிரியர் ஒருவரின் மகனை குறிப்பிட்டிருந்தார். அதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அது மட்டும் இல்லாமல் ஆன்லைன் வகுப்பு நடைபெற்றபோது, மாணவி செல்போன் பயன்படுத்தியுள்ளார். அந்த செல்போனை கைப்பற்றி போலீசார், அந்த செல்போனில் உள்ள மெசேஜ்கள், வீடியோக்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செல்போன் மூலமாக மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இன்று காலை கல்லூரி மாணவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பொறியியல் கல்லூரி மாணவக்கான விக்னேஷ் என்ற அந்த மாணவன், இன்ஸ்டாகிராம் மூலம் பள்ளி மனைவியிடம் பழகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், அந்த பள்ளி மாணவியின் செல்போனுக்கு தொடர்ந்து, அந்த கல்லூரி மாணவர் அழைத்திருந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், ஆபாச மெசேஜ் அனுப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அந்த கல்லூரி மாணவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
MANGADU SCHOOL GIRL SUICIDE CASE MORE INFO