காஞ்சிபுரத்தில் கோர விபத்து : நேருக்கு நேர் மோதிய ஆம்னி வேன்-பைக் - வாலிபர் பலி.!! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரத்தில் கோர விபத்து : நேருக்கு நேர் மோதிய ஆம்னி வேன்-பைக் - வாலிபர் பலி.!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள களக்காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மகன் கண்ணன். கூலித்தொழிலாளியான இவர் நேற்று இருசக்கர வாகனத்தில் காஞ்சிபுரத்திற்குச் சென்றுவிட்டு வீட்டிற்குத் திரும்பி கொண்டிருந்தார். 

அப்போது, உத்திரமேரூரில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி வேகமாக வந்த ஆம்னி வேன் ஒன்று நொடி பொழுதில் கண்ணனின் இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. 

இதில் படுகாயமடைந்து கண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதேபோல், ஆம்னி வேனை ஓட்டி வந்த ஓட்டுனரும் படுகாயமடைந்து உயிருக்கு போராடினார். 

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஓடி வந்து, படுகாயமடைந்த வேன் ஓட்டுனரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

அதன் படி அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man died for bike accident in kanchipuram


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->