அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் தொழிலாளி உயிரிழப்பா? காவல்துறை விசாரணை..!
Man Dead Near Kallakurichi
அளவுக்கு அதிகமாக மது அருந்திய நபர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளகுறிச்சி மாவட்டம், மாம்பழப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு(வயது 45). இவருக்கு திருமணமாகி சுமதி என்ற மனைவியும் குழந்தைகளும் உள்ளனர். ராமு மதுவுக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. அவரது மனைவி பலமுறை மதுபழக்கத்தை விட கோரியும் அவர் விடவில்லை என தெரிகிறது.
இதனால், சுமதி தனது குழந்தைகளுடன் தனியே வசித்து வருகிறார்.ராமு தனது குழந்தைகளை பார்த்து விட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். சம்பவதன்று தனது மகளை பார்த்து விட்டு சென்றவர் மணலூர்பேட்டை சந்தமேடு பகுதியில் சடலமாக கிடந்தார்.
தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அளவுக்கு அதிகமாக அவர் மது அருந்தியதால் உயிரிழந்திருக்கலாம் என தெரிகிறது.
English Summary
Man Dead Near Kallakurichi