அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் தொழிலாளி உயிரிழப்பா? காவல்துறை விசாரணை..! - Seithipunal
Seithipunal


அளவுக்கு அதிகமாக மது அருந்திய நபர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளகுறிச்சி மாவட்டம், மாம்பழப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு(வயது 45). இவருக்கு திருமணமாகி சுமதி என்ற மனைவியும் குழந்தைகளும் உள்ளனர். ராமு மதுவுக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. அவரது மனைவி பலமுறை மதுபழக்கத்தை விட கோரியும் அவர் விடவில்லை என தெரிகிறது.

இதனால், சுமதி தனது குழந்தைகளுடன் தனியே வசித்து வருகிறார்.ராமு தனது குழந்தைகளை பார்த்து விட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். சம்பவதன்று தனது மகளை பார்த்து விட்டு சென்றவர் மணலூர்பேட்டை சந்தமேடு பகுதியில்  சடலமாக கிடந்தார்.

தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அளவுக்கு அதிகமாக அவர் மது அருந்தியதால் உயிரிழந்திருக்கலாம் என தெரிகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Man Dead Near Kallakurichi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->