தற்கொலைக்கு முயன்ற விசாரணை கைதி மரணம்.. ஜாமீன் எடுக்காததால் விபரீத முடிவு..! - Seithipunal
Seithipunal


தற்கொலைக்கு முயன்ற விசாரணை கைதி மரணமடைந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், டி. புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவர் அதே பகுதியைச் சேர்ந்த சின்னராசு என்பவர் கொலை வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் விழுப்புரம் மாவட்ட சிறைச்சாலையில் இருந்து வந்தார். 

சிறைக்கு வந்து மூன்று மாதங்கள் ஆகியும் அவரது உறவினர்கள் ஜாமீன் எடுக்காததால் விரக்தியடைந்த  அவர் தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவரை மீட்ட சிறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Man committed suicide Near Vizhuppuram


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->