இட பிரச்சனையில் தகராறு..!! விவசாயியை அடித்து கொன்ற டிரைவர்..!!
Man arrested near tenkasi
விவசாயியை அடித்து கொன்றதாக காவல்நிலையத்தில் டிரைவர் சரணடைந்துள்ளார்.
தென்காசி மாவட்டம், ஆயாள்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகையா. இவருக்கு திருமணமாகி மருதாத்தாள் என்ற மனைவியும் இரு மகன்களும் உள்ளனர்.
இவர் சம்பவத்தன்று தனது தோட்டதிற்கு சென்றுள்ளார். அந்த வழியாக சென்ற பெரியதுரை என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து செல்வதாக கூறி அழைத்து சென்றுள்ளார்.
இதனை அடுத்து, பெரியதுரை காவல்நிலையத்துக்கு சென்று தங்கையாவை அடித்து கொன்று விட்டதாக கூறியிருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றினர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் இட பிரச்சனி காரணமாக கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
English Summary
Man arrested near tenkasi