பெரியப்பாவைக் கொன்ற ஆத்திரம் - இரும்பு ராடால் அக்காவைக் கொன்ற தம்பி கைது.! - Seithipunal
Seithipunal


பெரியப்பாவைக் கொன்ற ஆத்திரம் - இரும்பு ராடால் அக்காவைக் கொன்ற தம்பி கைது.!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆர்.காவனூர் பகுதியை சேர்ந்தவர் ரவி மகள் பவித்ரா. இவருக்கும், உச்சிப்புளியை சேர்ந்த முத்துக்குமார் என்பவருக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். தம்பதியினருக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பவித்ரா கணவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்தார். 

அங்கு பவித்ரா தனது தாயுடன் சேர்ந்து செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்று வந்தார். அப்போது, பவித்ராவிற்கு முருகானந்தம் என்ற லாரி ஓட்டுனருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த ரவி தனது மகளையும், மனைவியையும் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாக்கியமும், பவித்ராவும் குடிபோதையில் இருந்த ரவியை கடந்த ஆண்டு மார்ச் மாதம் தீ வைத்து எரித்துக்கொன்றனர். 

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், ரவி மகள் பவித்ரா கள்ளக்காதலன் முருகானந்தத்துடன் சேர்ந்து தந்தையை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பாக்கியம், பவித்ரா, லாரி டிரைவர் முருகானந்தம் உள்ளிட்ட மூன்று பேரைக் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து பாக்கியமும், பவித்ராவும் ஜாமீனில் வெளியே வந்தனர். 

இதையறிந்த ரவியின் தம்பி மகனான மணிகண்டன் என்பவர் பெரியப்பாவைக் கொன்ற ஆத்திரத்தில் ஜாமீனில் வந்த பவித்ராவை கண்டித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த வாக்குவாதம் சிறிது நேரத்தில் அதிகமானதால், ஆத்திரம் அடைந்த மணிகண்டன் தான் கையில் வைத்திருந்த இரும்பு ராடால் பவித்ராவை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் பவித்ரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அதன் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மணிகண்டனை கைது செய்தனர். மேலும் பவித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for kill sister in ramanathapuram


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->