திருச்சி || தற்கொலை செய்த கல்லூரி மாணவி - விசாதனையில் சிக்கிய காதலன்.!
man arrested for girl friend murder case
திருச்சி மாவட்டம் ஶ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜன் மகள் ஜெய ஶ்ரீ. இவர் திருச்சியில் உள்ள கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். அப்போது ஜெயஸ்ரீ அதே பகுதியைச் சேர்ந்த கிஷோர் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில், ஜெய ஸ்ரீ நேற்றிரவு வடக்கு சித்திர வீதியில் உள்ள காதலனின் நண்பர் வீட்டுக்கு பின்புறமுள்ள மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
உடனே அவரை மீட்ட காதலன் கிஷோர், நண்பர்கள் உதவியுடன் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார். அங்கு ஜெய ஸ்ரீ சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த ஜெயஸ்ரீயின் தந்தை கோவிந்தராஜன் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
அந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், ஜெயஸ்ரீயின் காதலன் கிஷோர் மற்றும் அவரது நண்பர்கள் உட்பட ஐந்து பேரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து போலீசார் ஜெயஸ்ரீயை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்த, காதலன் கிஷோரை கைது செய்தனர்.
English Summary
man arrested for girl friend murder case