திமுக எம்எல்ஏ வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!!
Madrashc direct to TNGovt response on DMK MLA petition
அண்ணா பல்கலைக்கழக பதிவாளராக டாக்டர் பிரகாஷ் நியமனம் செய்ததை எதிர்த்து திமுக எம்எல்ஏ பரந்தாமன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில் சிண்டிகேட் கூட்டத்தில் டாக்டர் பிரகாஷை பதிவாளராக நியமிக்க ஒரு மனதாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
ஆனால் சிண்டிகேட் கூட்டம் முடிவுகளை திருத்தி டாக்டர் பிரகாஷை பதிவாளராக துணைவேந்தர் நியமித்த உள்ளார். எனவே சிண்டிகேட் கூட்டத்தின் முடிவை திருத்தி டாக்டர் பிரகாஷ் நியமனம் செய்ததை ரத்து செய்ய வேண்டும்" என அந்த மனதில் திமுக எம்எல்ஏ பரந்தாமன் வலியுறுத்தியுள்ளார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் உயர் கல்வித்துறை பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஜூன் 7-ம் தேதிக்கு ஒத்தி வத்துள்ளனர். மேலும் சிண்டிகேட் கூட்டங்களின் வீடியோ பதிவை பத்திரப்படுத்தி வைக்கும் படியும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
English Summary
Madrashc direct to TNGovt response on DMK MLA petition