எம்.ஜி.ஆரின் தனி உதவியாளர் காலமானார்..எடப்பாடி பழனிசாமி இரங்கல்! - Seithipunal
Seithipunal


தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் தனி உதவியாளர் மகாலிங்கத்தின் உடல் இறுதி அஞ்சலிக்காக ஆர்ஏ புரத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.அவரது மறைவிற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

மறைத்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். இவர் 1977 முதல் 1987 வரை தமிழக முதல்-அமைச்சராக பதவி வகித்ததார்.அந்த காலகட்டத்தில் எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தபோது அவரது தனி உதவியாளராக மகாலிங்கம் செயல்பட்டு வந்தார்.எம்.ஜி.ஆர். மறைந்த பிறகு சென்னை ஆர்ஏ புரத்தில் வசித்து வந்தார். 

இதனிடையே 73 வயதான மகாலிங்கம் அவருக்கு கடந்த சில நாட்களுக்குமுன் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் எம்ஆர்சி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், மகாலிங்கம் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மகாலிங்கத்தின் உடல் இறுதி அஞ்சலிக்காக ஆர்ஏ புரத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

M G R s personal assistant has passed away Edappadi Palaniswami expresses his condolences


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->