மதத்தை கடந்து காதல்.. ஐ.டி. ஊழியர் எடுத்த விபரீத முடிவு!
Love beyond religionThe IT employee made a disastrous decision
குமரி மாவட்டம் குலசேகரம் அருகே காதலி கிடைக்காத ஏக்கத்தில் காதலன் காதலி வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள காவுவிளை பகுதியை சேர்ந்தவர் தனுஷ்,22 வயதான இவர் கோவையில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.இவர், அவரது ஊரில் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்த போது வேறு மதத்தை சேர்ந்த மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
பின்னர் இருவரும் பிளஸ்-2 முடித்ததும் , கல்லூரி முடித்தும் தங்கள் காதலை தொடர்ந்து வந்தனர். இதற்கிடையே தனுஷின் குடும்பத்தினர் கோவையில் குடியேறினாலும் அவ்வப்போது குலசேகரத்திற்கு வந்து காதலியை சந்தித்து வந்தார்.இதனைத்தொடர்ந்து தனுஷ் கோவையில் ஐ.டி. ஊழியராக பணிபுரிந்தார். அதே சமயத்தில் பட்டப்படிப்பு முடித்த காதலி, மேற்கொண்டு உயர்கல்வி படிக்க கோவையை தேர்வு செய்தார். கோவையில் படித்தால் காதலனை சந்திக்க வாய்ப்பு இருக்கும் என கருதி இந்த முடிவை எடுத்தார்.
இதையடுத்து கோவையில் காதல் ஜோடி சிறகடித்து பறந்தது. இவ்வாறு காதல் இனிமையாக சென்ற நிலையில், காதல் விவகாரம் இருவீட்டாருடைய பெற்றோருக்கும் தெரியவந்தது. இந்த காதலை கடுமையாக எதிர்த்தனர். மாணவியின் படிப்பை அவருடைய குடும்பத்தினர் பாதியில் நிறுத்தினர்.
மேலும் அவசர, அவசரமாக மாப்பிள்ளை பார்த்தனர். அதுமட்டுமல்லாமல் தனுஷ்முறைப்படி வீட்டுக்கு சென்று பெண்ணும் கேட்டார். ஆனால் அதற்கு காதலி குடும்பத்தினர் செவி சாய்க்கவில்லை.
பின்னர் காதலியை வீட்டிலேயே சிறை வைத்தனர். செல்போனில் தனுஷ் தொடர்பு கொள்ளாதபடி மாற்று நடவடிக்கையில் களம் இறங்கினர். இதனால் தனுஷின் நிம்மதியை நிலைகுலைந்து ஒருகட்டத்தில் தற்கொலை முடிவை எடுத்தார்.அதற்க்காக
காதலி தான் கிடைக்கவில்லை, அவருடைய வீட்டிலேயே உயிரை மாய்த்துக் கொள்ளலாம் என முடிவெடுத்து காதலி வீட்டின் சுற்றுப்புற சுவரில் ஏறி குதித்து மாடியில் தூக்கு மாட்டி தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டார்.
நேற்று காலையில் மாடிக்கு சென்ற காதலி, அவருடைய தாயார், இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். காதலன் தன் கண்முன்னே பிணமாக தொங்குவதை பார்த்து மாணவி கதறி அழுதார். மேலும் இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, தனுஷின் பெற்றோர், உறவினர்கள் குற்றச்சாட்டி, குலசேகரம் காவல்நிலையத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
English Summary
Love beyond religionThe IT employee made a disastrous decision