ஈரோடு.! லாரி மற்றும் சரக்கு வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு.!
Lorry van accident in erode
ஈரோடு மாவட்டத்தில் லாரி மற்றும் சரக்கு வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உடுமலைப்பேட்டையில் இருந்து தேங்காய் லோடு ஏற்றிக்கொண்டு பெங்களூர் நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.
அப்பொழுது ஆந்திர மாநிலத்தில் இருந்து கேரளாவை நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு வேன் இன்று அதிகாலை லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சரக்கு வேனில் இருந்த ஓட்டுனர் ஹரீஷ்குமார், கிளீனர் மஞ்சுநாத் ஆகிய 2 பேரும் நிகழ்விடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்து உள்ளனர்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த அம்மாபேட்டை காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் காயமடைந்த தேங்காய் லோடு ஏற்றி வந்த லாரி ஓட்டுனர் சிகிச்சைக்காக பவானி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Lorry van accident in erode