#ஈரோடு || இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி விபத்து.! கல்லூரி மாணவர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் தொட்டம்பாளையம் பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் கரண்(20). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.

இந்நிலையில் உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்ற கரண் மீண்டும் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் தொட்டம்பாளையம் சாலையில் வந்து கொண்டிருந்தார்.

அப்பொழுது அந்த வழியாக வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக கரண் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில் தலையில் வளர்த்த காயம் அடைந்த கரண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த பவானிசாகர் காவல்துறையினர் கரணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Lorry twowheeler accident in erode


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->