திருப்பூர் || முன்னால் சென்ற லாரி மீது கார் மோதி விபத்து.! கணவன்-மனைவி காயம்
Lorry car accident in Tiruppur
திருப்பூர் மாவட்டத்தில் முன்னால் சென்ற லாரி மீது கார் மோதி விபத்தில் கணவன்-மனைவி காயமடைந்துள்ளனர்.
கோவையிலிருந்து லாரி ஒன்று கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்பொழுது திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே லாரி சென்ற போது, பின்னால் வந்த கார் லாரி மீது மோதியது.
இதில் காரில் இருந்த கணவன்-மனைவி இருவரும் அதிர்ஷ்டவசமாக காயத்துடன் உயிர் தப்பியுள்ளனர்.
இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த வெள்ளக்கோவில் காவல்துறையினர், விபத்துக்குள்ளான வாகனங்களை சாலையிலிருந்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Lorry car accident in Tiruppur