சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 2 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் குருப்பநாயக்கன்பாளையம் பகுதியில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக பவானி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலையடுத்து பவானி போலீசார் குருப்பநாயக்கன்பாளையம் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அய்யனாரப்பன் கோவில் வீதியில் சந்தானம்(51) என்பவர் மது பாட்டில்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து சந்தானத்தை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 15 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.

இதேபோல், செங்கோடன் டீக்கடை வீதியில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த சந்திரன்(56) என்பவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த 101 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Liquor sellers arrest in erode


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->