காவலர்களின் மின்னல் வேக ஆக்ஷன்...! மணலியில் அரங்கேறவிருந்த பயங்கர கொலைச் சதி முறியடிப்பு... 8 பட்டாக்கத்திகளுடன் சிக்கிய கும்பல்...! - Seithipunal
Seithipunal


சென்னை மணலி பகுதியில் முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவரை கொலை செய்யும் நோக்கில் பட்டாக்கத்திகள் மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த கும்பலை, காவலர்கள் துரிதமாக சுற்றிவளைத்து கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மணலி புதுநகர் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியின் காலி மைதானத்தில், நேற்று அதிகாலை சில இளைஞர்கள் பட்டாக்கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்ததாக அப்பகுதி மக்கள் கவனித்துள்ளனர்.

இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் உடனடியாக மணலி புதுநகர் காவலர்களுக்கு தகவல் தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தத்  தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவலர்கள், காலி மைதானத்தை சுற்றிவளைத்து ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த எட்டு பேரையும் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். பின்னர் அனைவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த லாரன்ஸ் (23), ரதீஷ் (24), சந்தோஷ் (21), கிருஷ்ணன் பிரசாத் (22), சசிகுமார் (20), சஞ்சய் (23), விக்னேஷ் (24) மற்றும் 17 வயதுடைய சிறுவன் என்பது தெரியவந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நடத்தப்பட்ட விசாரணையில், இவர்களுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு கும்பலுக்கும் நீண்டநாளாக முன்விரோதம் இருந்து வந்ததும், அண்மையில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் ஏற்பட்ட மோதல் இந்த பகையை மேலும் தீவிரப்படுத்தியதும் தெரியவந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக, எதிர்தரப்பைச் சேர்ந்த முகேஷ் என்ற இளைஞரை கொலை செய்யும் நோக்கில் பட்டாக்கத்திகளுடன் அவர்கள் காலி மைதானத்தில் பதுங்கி காத்திருந்ததாக கைது செய்யப்பட்டவர்கள் விசாரணையின்போது தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நடவடிக்கையின்போது, அவர்களிடமிருந்து எட்டு பட்டாக்கத்திகள் மற்றும் பல அரிவாள்களை காவலர்கள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, கைது செய்யப்பட்ட ஏழு பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

17 வயது சிறுவன் அரசு சீர்திருத்தப் பள்ளியில் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.காவலர்களின் துரிதமான செயல்பாட்டால் திட்டமிடப்பட்டிருந்த கொலைச் சம்பவம் முறியடிக்கப்பட்டதுடன், பெரும் அசம்பாவிதமும் முன்கூட்டியே தடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Lightning fast action by police terrible murder plot that about staged Manali foiled gang caught 8 knives


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->