வழக்கறிஞரை நடுரோட்டி வெட்டி கொன்ற மர்ம நபர்கள்.. காவல்துறை தீவிர விசாரணை..!
Lawyer murdered near Theni
மர்ம நபர்களால் வழங்கறிஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் கூடலூரில் வசித்து வருபவர் மதன். இவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இன்று அவரது வாகனத்தில் உத்தமபாளையம் - கம்பம் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியே வந்த மர்ம நபர்கள் அவரை வழிமறித்து அரிவாளால் சரமாறியாக வெட்டி கொலை செய்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Lawyer murdered near Theni