விழுப்புரம்: 12 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை.! தொழிலாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை.! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டத்தில் 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்று புதைத்த தொழிலாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் கொண்டசமுத்திரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி சேகர் (41). இவர் கடந்த 2016ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 12 வயதுடைய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்பு சிறுமியை கல்லால் அடித்து கொன்று, கரும்பு தோட்டத்தில் பள்ளம் தோண்டி புதைத்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு போக்சோ சட்டத்தின் கீழ் சேகரை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விழுப்புரத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்த சேகருக்கு சாகும் வரை சிறை தண்டனையும், ரூபாய் 10,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூபாய் 10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து சேகர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Laborer who raped killed and buried 12 year old girl jailed till death in Villupuram


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->