#தென்காசி | காட்டுப்பகுதிக்கு கடத்திச்சென்று 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - கூலித்தொழிலாளி கைது - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டத்தில் 10 வயது சிறுமியை காட்டுப்பகுதிக்கு கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த கூலித்தொழிலாளியை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம் ஊர்மேலழகியான் பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி மாணிக்கம் (25). இவர், கடைக்குச் சென்ற 10 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி மோட்டார் சைக்கிளில் காட்டுப்பகுதிக்கு கடத்திச் சென்றுள்ளார். பின்பு அங்கு வைத்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார். 

இதைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில் இதையறிந்த மாணிக்கம் தலைமறைவானார். இதைத்தொடர்ந்து, சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தலைமறைவான மாணிக்கத்தை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட வைத்தனர். இந்நிலையில், புளியங்குடி அருகே உள்ள காட்டுப்பகுதியில் மாணிக்கம் மறைந்திருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து போலீசார், காட்டுப்பகுதியில் மறைந்திருந்த மாணிக்கத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Laborer arrested for sexually harassing 10 year old girl in thenkasi


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->