திண்டுக்கல் || 12ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய கூலித் தொழிலாளி.! போக்சோவில் கைது.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய கூலித் தொழிலாளியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் செடிப்பட்டி பகுதியை சேர்ந்த மூக்கன் என்பவரது மகன் கூலித்தொழிலாளி ஆண்டிச்சாமி(26). இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த 17 வயதுடைய 12ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிககும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்த பழக்கம் இவர்களிடையே காதலாக மாறியதால், இருவரும் நெருக்கமாக பழகி உள்ளனர். இதையடுத்து ஆண்டிச்சாமி, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த மாணவியுடம் உல்லாசமாக இருந்துள்ளார். மேலும் இதைப் பற்றி யாரிடமும் கூற வேண்டாம் என்று ஆண்டிச்சாமி, மாணவியிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து திடீரென மாணவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அப்பொழுது அங்கு பரிசோதனை செய்த போது, மாணவி 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து குழந்தைகள் நல அலுவலர், சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து, மாணவியை கர்ப்பமாக்கிய ஆண்டிச்சாமியை போச்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Laborer arrested for pregnant 12 student in Dindigul


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->