கோவில்பட்டி : ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக் கொலை.. 2 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


கோவில்பட்டி அருகே ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு திட்டங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பொன்ராஜ் (வயது 63), இவர் அவரது பண்ணை வீட்டுத் தோட்டத்தில் மர்மநபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

கொலை குறித்து விசாரணை நடத்திய கோவில்பட்டி கிழக்கு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், கொலையில் தொடர்புடைய கார்த்திக்(வயது 33) மற்றும் வசந்த் (வயது 18) ஆகிய இருவரை கைது செய்தனர். 

இதில் கார்த்திக் தேவேந்திரகுல வேளாளர் மோடி பாசறை என்ற அமைப்பு சார்பாக கடந்த விழா சுதந்திர தின விழா அன்று நடந்த கிராமசபை கூட்டத்தில் கோரிக்கை வைத்ததாகவும் அந்த கோரிக்கை தொடர்பாக இந்த கொலை நடந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kovilpatti: Panchayat council president hacked to death


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->