பெண்களுக்கான தேசிய ஆணையத்தின் உறுப்பினராக நடிகை குஷ்பு பரிந்துரை - அண்ணாமலை வாழ்த்து! - Seithipunal
Seithipunal


பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு சுந்தர், பெண்களுக்கான தேசிய ஆணையத்தின் உறுப்பினராக பரிந்துரைக்கப்பட்டு உள்ளார்.

இதனை அறிந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குஷ்புவிற்கு தனது வாழ்த்தினை தெரிவித்து உள்ளார். அவரின் அந்த வாழ்த்துச் செய்தியில், "இது அவரது இடைவிடாத முயற்சி மற்றும் பெண்களின் உரிமைகளுக்கான போராட்டத்திற்கான அங்கீகாரம்" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே தனியார் செய்தி ஊடகம் ஒன்றிக்கு நடிகை குஷ்பு தொலைபேசி மூலம் அளித்துள்ள பேட்டியில், "பெண்களுக்கான தேசிய ஆணையத்தின் உறுப்பினராக பரிந்துரைக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தடுக்க என்னால் முடிந்ததை செய்வேன். அண்மையில் கூட திமுகவினர் என்னை கொச்சை படுத்தி பேசி இருந்தனர்" என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

khushbu sundar nominated as a Member of the National Commission for Women


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->